உங்கள் ராசிக்குரிய பெருமாள் மந்திரம் – இறுதிப் பகுதி

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு திருமால் மந்திரம் அமையப் பெற்றிருக்கிறது. இது பலரும் அறியாத விஷயமாக இருந்து வருகிறது. அந்தந்த ராசிக்காரர்கள், அந்தந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால், திருமாலின் ஆசி பரிபூரணமாக கிட்டும். அவரின் அனுகிரகம் கிடைத்தாலே நமக்கு செல்வ வளம் அள்ள அள்ள குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும் அல்லவா?

செல்வத்திற்கு அதிபதியாக இருக்கும் மகா லக்ஷ்மியை மனைவியாக கொண்டவராய் விளங்குவதால் இந்த மந்திரம் உச்சரிப்பவர்களுக்கு சகல செல்வ சம்பத்துகளும் விரைவில் உண்டாகும் என்பது ஐதீகம். இதில் குறிப்பாக எந்தெந்த ராசிக்காரர்கள்? எந்த மந்திரத்தை உச்சரித்து பயனடையலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்!!!

இன்று இறுதியில் உள்ள மூன்று ராசிகளுக்கான மந்திரங்கள்

மகர ராசி:

 

இதுவரை இருந்து வந்த குழப்பமான மனநிலை மாறுவதற்கும், செல்வவளம் செழித்து ஓங்கவும் இந்த மந்திரத்தை தினமும் உச்சரிப்பது நலம் தரும்.

இதோ உங்களுக்கான மந்திரம்:

 

ஓம் ஹ்ருஷிகேசாய நம:

………………………………………

 

கும்ப ராசி:

 

இந்த மந்திரம் வாழ்வில் பெரிய மாற்றத்தை நிச்சயம் உண்டாக்கும். நீங்கள் வாழ்க்கையில் மேன்மை அடையவும், செல்வ வளம் பெருகும் வேண்டி இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வரலாம்.

இதோ உங்களுக்கான மந்திரம்:

 

ஓம் பத்மநாபாய நம:

………………………………..

 

மீன ராசி:

 

பணப்பிரச்சினை ஏற்பட்டாலும், மன சங்கடமான சூழ்நிலை உண்டானாலும், வளமான வாழ்வு அமையவும் வேண்டி இந்த மந்திரத்தை தினமும் உச்சரிக்கலாம்.

இதோ உங்களுக்கான மந்திரம்:

 

ஓம் தாமோதராய நம: