தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவர் விஷ்ணு விஷால் . கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் கே.நட்ராஜின் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டார்கள்.

இந்நிலையில் விஷ்ணு விஷால் நடிகை ஒருவருடன் காதல் வயப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவி வரும் இந்த வேளையில் அதற்கு மறுப்பு தெரிவித்து அவர் காதல் மனைவியை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை கூறியிருக்கிறார். தனது துறையில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்த தான், பணியின் காரணமாக நடிகைகளுடன் சகஜமாக பழகியதால் தான் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், அதை மனைவி புரிந்துக்கொள்ள தவறியதாலேயே விவாகரத்து வரை சென்றதாகவும், கூறியிருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன் நான் யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்த ஒரு நபர். இந்த ஆளுமை என் வளர்ச்சியைத் தடுப்பதாக நம்பியதால், எல்லோருடனும் சகஜமாகப் பேச ஆரம்பித்தேன். குறிப்பாக, திரைப்படங்களில் காதல் காட்சிகளில் சிறப்பாக நடிக்க, பெண்களிடமும் சகஜமாகப் பழகினேன். அப்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது.

‘நீ மாறிவிட்டாய்’ என்ற பேச்சு வந்தது. அப்படியே அது, ‘நான் இந்த நபரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என்ற நிலைக்கு மாறியது. திருமணம் முடிந்துவிட்டது என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால், செய்துதான் ஆகவேண்டும். என் மகனின் நலனுக்காக, மனைவியின் நலனுக்காக என கூறியுள்ளார்.