க்களை நன்னெறி படுத்தவும், பண்பில் சிறந்தது விளங்கவுமே ஆன்மிகம் வழிகாட்டுகிறது.

வழிபாடு ஒன்றே மனிதனின் மனதை அடக்கி ஒன்றுபடச் செய்கிறது. விலங்குக்கும், மனிதனுக்கும் உள்ள வேறுபாடே மனம்தான். இந்த மனத்தை கட்டுப்படுத்தவே அந்த காலத்தில் வழிபாட்டு முறை களை ஆன்றோர்கள் உருவாக்கி உள்ளனர்.

விஷ்ணுவின் 10 அவதாரங்கள் நமது பிறப்பின் மகத்துவத்தையே விளக்குகிறது.

அவை என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்…..

 

1. மச்ச அவதாரம்

தாயின் வயிற்றிலிருநது ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன்.

2. கூர்ம அவதாரம்

மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.

3. வராக அவதாரம்

ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.

4. நரசிம்ம அவதாரம்

எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம் .

5. வாமண அவதாரம்

ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.

6.பரசுராம அவதாரம்

வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.

7. ராம அவதாரம்

திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.

8. பலராம அவதாரம்

இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.

9.கிருஷ்ணஅவதாரம்

முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.

10. கல்கி அவதாரம்

இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம்- முக்தி பெறுவது.