ஜீத் நடித்து சிவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் விவேகம் படத்தின் கதை தன்னுடையது என்று தயாரிப்பாளர் ரவீந்திரன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

இவரது பதிவுக்கு ‘பலூன்’ இயக்குநர் சினிஷ் தன்னுடைய கருத்தை  பின்னூட்டமாக வெளியிட்டார்.  அதற்கு ரவீந்திரனும் பதிலளித்து வந்தார். சிறிது நேரத்தில்  இயக்குநர் சினிஷை ரவீந்திரன் ப்ளாக் செய்துவிட்டார்.

இதையடுத்து  ‘பலூன்’ இயக்குநர் சினிஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

‘விவேகம்’ படத்தின் கதை தனது என்று ஒருவர் அர்த்தமில்லாத பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.   அவர் என் நண்பர் தான். ஆனால் அவருக்கு  விளம்பரம் தேவைப்படுகிறது அல்லது அவர் சிறுபிள்ளைத்தனமானவர் என நினைக்கிறேன். என் முகநூல் பக்கத்தை அவர்  ப்ளாக் செய்துவிட்டார்.

மற்ற நாயகர்களின் ரசிகர்களும் வேறு பலரும், ஒருவருக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்று அவரது பதிவை பகிர்ந்து வருகின்றனர். இதை ஆதரிக்காதீர்கள். ஏனென்றால், இந்த மாதிரியான ஆட்களால், நாளையே வேறொருவர் இது போன்ற பிரச்சினையில் மாட்டி அவரிடம் ஆதாரம் இருந்தாலும் அவரை நாம் புறக்கணித்துவிடுவோம்.

யோசித்து, ஆதரவு அளியுங்கள். நாம் கொஞ்சம் முதிர்ச்சியாக நடந்து கொள்வோம்” என்று இயக்குநர் சினிஷ் பதிவிட்டுள்ளார்.