உலகை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஊரடங்கு கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதால் வீடுகளிலேயே இருக்குமாறு மக்களை சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் நடிகையும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளருமான ரம்யா தற்காப்பு கலையான சிலம்பம் சுற்றுவதை கற்று வருகிறார். ரம்யா சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள வீடியோ பதிவில் “இந்த மாதம் முதல் சிலம்பம் கலையை கற்று வருகிறேன். இது எனக்கு நானே அளித்து கொண்ட பரிசு. தமிழ் வீரர்கள் மீது தனி மரியாதை ஏற்பட்டுள்ளது“ என்றுள்ளார்.