சென்னை:

வாக்காளர் பட்டியல் திருத்தம்,  சரிபார்ப்புக்கான கால அவகாசம் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.  அதையடுத்து,  புதிய வாக்காளர் பட்டியல் 2020ம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியிடப்படும் என்றும்  இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம், புதிய வாக்காளர் சேர்த்தல்,  சரிபார்ப்பு திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி, வாக்காளர்கள் 1950 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டும், செயலி மற்றும் இணையதளம் மூலமும் திருத்தம் மேற்கொள்ளலாம் என அறிவித்தது.

கடந்த செப்டம்பர் மாதம் 30ந்தேதியுடன் அவகாசம் முடிவடைந்த நிலையில்,  பின்னர் அக்டோபர் 15ம் தேதி வரையுடுத்து, அதையடுத்து,  நவம்பர் 18ம் தேதி வரையும்  கால அவகாசத்தை  தேர்தல் ஆணையம் நீட்டிப்பு செய்தது.

இந்த நிலையில், தற்போது,   நவம்பர் 30ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் வருகிற 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிசம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் டிசம்பர் 16ம் தேதி முதல் 2020 ஜனவரி 15ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெறும்.

இதையடுத்து 27-1-2020ம் தேதிக்குள் புதிதாக பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய விண்ணப்பம் அளித்தவர் களின் விண்ணப்பங்கள் சரி பார்க்கும் பணிகள் முடிவடையும். தொடர்ந்து வருகிற பிப்ரவரி 7ம் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.