சென்னை:

ட்டளிப்பது உங்களது உரிமை, அந்த உரிமைக்காக போராடுங்கள்” !  சர்ச்சைகளுக்கு இடையே தனது வாக்கை செலுத்திய சிவகார்த்தியேன் டிவிட் போட்டுள்ளார்.

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என  டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்த சிவகார்த்திகேயன், தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று, வாக்களிக்க செல்லாமல் இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல நடிகர்கள் ரமேஷ் கண்ணா, ரோபோ சங்கர் ஆகியோரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை. இது குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா தனது கண்டனத்தை வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், பெயர் குழப்பத்திற்கு பின்பு, சிவகார்த்திகேயன் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கத்தில் உள்ள ஓட்டுச்சாவடி ஒன்றில் ஓட்டளித்தார். இதை அவர்  தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதார்.

அதில்,  “ஓட்டளிப்பது உங்களது உரிமை, அந்த உரிமைக்காக போராடுங்கள்” என பதிவிட்டுள்ளார். அத்துடன் தனது விரலில் வாக்களிப்பதை உறுதி செய்யும் மை வைத்துள்ள படத்தையும் பதிவிட்டுள்ளார்.