ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு அமைதியான முறையில் தொடங்கியது.

81 உறுப்பினா்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 30ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக 20 தொகுதிகளுக்கும், மூன்றாவது கட்டமாக 17 தொகுதிகளுக்கு கடந்த டிசம்பர் 7 மற்றும் 12ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தன.

இந்நிலையில், 4வது கட்டமாக 15 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் 23 பெண்கள் உள்பட 221 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். அதிகபட்சமாக பொகாரோ தொகுதியில் 35 வேட்பாளா்களும், குறைந்தபட்சமாக நிா்சா தொகுதியில் 8 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா். இவா்களது வெற்றியை, சுமாா் 47 லட்சம் வாக்காளா்கள் தீா்மானிக்க உள்ளனா். ஜமுவா, பகோதா், கிரிதி, தும்ரி, துண்டி ஆகிய 5 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதர தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

ஜாா்க்கண்டில் 5ம் கட்ட தேர்தல் 20ம் தேதி நடைபெற உள்ளது. 5 கட்டங்களாக நடக்கும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.