சென்னை:
திமுகவில் இருந்து துணைப்பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் துணைசபாநாயகர்  வி.பி.துரைசாமி, பாஜக மாநில தலைவர் முருகன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.

திமுக தலைமையில் சில மாதங்களாக ஓரங்கப்பட்டு வந்த திமுக துணைப்பொதுச்செயலாளரான வி.பி.துரைசாமி, கடந்த வாரம் தமிழக மாநில பாஜக தலைவர் முருகனை சந்தித்து பேசினார்.  இது தமிழகஅரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்,  நேற்று திடீரென திமுக தலைமை, அவரது துணைப்பொதுச்செயலாளர் பதவியை பறித்தது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான துரைசாமி, இன்று பாஜகவில் சேரப்போவதாக அறிவித்தார்.
அதன்படி இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றவர், அங்க  பாஜக மாநில தலைவர் எல்.முருகனை  சந்தித்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
முதன்முதலாக அதிமுகவில் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய வி.பி.துரைசாமி, தனது ராஜ்யசபா எம்.பி.பதவியை உதறிவிட்டு திமுகவில் இணைந்தார். அவருக்கு கருணாநிதி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர், துணை சபாநாயகர் பொறுப்புகளை வழங்கினார். தற்போது அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.