ஹூப்ளி:

ர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு  பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஹூப்ளி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 180-ல் வாக்கு பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரமான விவிபிடி இயந்திரம் பழுதானதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தேர்தல் அதிகாரி வாக்குப்பதிவை சிறிது நேரம் ஒத்தி வைத்தார். அதைத் தொடர்ந்து விவிபிடி இயந்திரம் மாற்றப்பட்டதை தொடர்ந்து மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.