தமிழகத்தில், உள்கட்டமைப்பு வசதி இல்லாத மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் கல்லுாரி உட்பட  நான்கு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது’ என்று, மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.

மேல் மருவத்தூர் மருத்துவக்கல்லூரி

காஞ்சிபுரம் மாவட்டம், பென்னலுாரில் உள்ள, அன்னை மருத்துவக் கல்லுாரி, சென்னை மாதா மருத்துவக் கல்லுாரி,  மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் கல்லுாரிகளில், போதுமான வசதிகள்  இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து கடந்த ( 2016ம்) வருடம்  இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அதிகாரிகள் இந்த கல்லூரிகளில் ஆய்வு செய்தனர்.  “அடுத்த கல்வியாண்டுக்குள்  வசதிகளை செய்ய வேண்டும்’ என்ற நிபந்தனையுடன், 2016 – 17ல், எம்.பி.பி.எஸ்., படிப்பில் தலா, 150

மாதா மருத்துவக்கல்லூரி

மாணவர்களைச் சேர்க்க, அனுமதி அளித்தனர்.

ஆனால், நிபந்தனை காலத்திற்குள் இந்தக் கல்லூரிகள் வசதிகளை மேம்படுத்தவில்லை. அதனால், எம்.சி.ஐ., பரிந்துரைப்படி, மூன்று மருத்துவக் கல்லுாரிகளுக்கும், 2017 – 18, 2018 – 19 என, இரு கல்வியாண்டுகளில் மாணவர் சேர்க்கை நடத்த, தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் கோவை கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரிக்கு, 150 எம்.பி.பி.எஸ்.,

அன்னை மருத்துவக்கல்லூரி

இடங்களில், மாணவர் சேர்க்கைக்கு, ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. போதுமான கட்டுமான வசதிகள் இல்லாததால், எம்.பி.பி.எஸ்., இடங்களில், மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது.  மேலும் தற்போது படித்து வரும் மாணவர்களுக்கு வைப்பு நிதியாக, 2 கோடி ரூபாயை, வங்கியில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்ட்டுள்ளது.

ஆகவே மேற்கண்ட நான்கு கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டாம் என்று பெற்றோருக்கு எச்சிரிக்கை விடப்பட்டுள்ளது.