ரோதக்: ‛பாரத் மாதா கீ ஜே’ எனும் கோஷத்தை எழுப்ப மறுப்பவர்களின் தலையை வெட்டிக் கொல்ல வேண்டும் என்று பேசிய  கார்பரேட் சாமியார்  பாபா ராம்தேவ் மீது ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பேசிய கார்பரேட் சாசமியார் பாபா ராம்தேவ் ‛பாரத் மாதா கீ ஜே’ கோஷத்தை முழங்காதவர்களின் தலையை வெட்டிக் கொல்ல வேண்டும்” என்று பேசினார்.

இந்த பேச்சுக்காகக ராம் தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் உள்துறை அமைச்சரும், மூத்த காங்., தலைவருமான சுபாஷ் பத்ரா, அரியானா மாநிலம் ரோத்தக் நீதிமன்றத்தில் பாபா ராம்தேவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து ராம்தேவ் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால்  கடந்த மே 12ம் தேதி விசாரணைக்கு பாபா ராம்தேவ் ஆஜராகவில்லை. மீண்டும் அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், சம்மன் அனுப்பிய போதும், நேரில் ஆஜராகாத பாபா ராம்தேவ் மீது ஜாமினில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.