கொழும்பு: இலங்கை தலைநகரில் நான்காவது ஹோட்டலில் நடத்தப்படவிருந்த தாக்குதல் தோல்வியடைந்திருப்பதாகவும், தாக்குதலுக்கு உள்ளான ஷாங்ரி லா ஹோட்டல், அடுத்த அறிவிப்பு வரும்வரை மூடப்பட்டிருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த திங்கட்கிழமை, ஒரு வெடிகுண்டை செயலிழக்கச் செய்வதற்கு, நிபுணர்கள் முயற்சித்தபோது, அது வெடித்தது. இது எட்டாவது ண்டுவெடிப்பாகும். கொழும்பு நகரில் 87 வெடிப்பொருட்களை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்துள்ளனர்.

கொழும்பு நகரிலுள்ள அனைத்து காவல் நிலையங்களும், உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தாக்குதல் நடத்தப்பட்ட 5 ஹோட்டல்களில், மிக முக்கியமானது ஷாங்ரி லா ஹோட்டல். இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி தங்கும் நட்சத்திர ஹோட்டல் இதுவாகும்.

– மதுரை மாயாண்டி