மத்திய அரசால் ரூ. 5 லட்சம் கோடி எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஏலம் வெறும் 65 ஆயிரம் கோடியில் ஏமாற்றமாய் முடிந்ததற்கு யார் காரணம் என்ற விவாதங்கள் சமூக வலைதளங்கள் பரபரப்பாக நடந்து வருகிறது.
அரசால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிட்டதட்ட 4 லட்சம் கோடி விலை மதிப்புள்ள 700 Mhz மற்றும் 900 Mhz அலைக்கற்றைகளை யாரும் ஏலம் எடுக்க முன்வராததே ஏலம் ஏமாற்றத்தில் முடிய காரணம் ஆகும். இது மொத்த அலைக்கற்றைகளின் விகிதத்தில் 60% ஆகும்.

mobile_tower

ரூ.63,325 கோடிக்கான ஏலம் 26 ஆவது சுற்றில்  உறுதி செய்யப்பட்டது. வியாழன்று ஒவ்வொரு சுற்றுக்களும் 45 நிமிடங்களின் முடிவடைந்தது, ஆனால் முந்தைய காலங்களில் 60 நிமிடங்கள் நடப்பது வழக்கமாகும்.  பெரும்பாலானவர்கள் 2100Mhz  (3ஜி/4ஜி), 2500Mhz (4ஜி) மற்றும் 800Mhz (2ஜி/4ஜி) ஆகியவற்றில்தான் அதிகம் ஆர்வம் காட்டினார்கள்.
கடந்த 2014-ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 2,90,000 கோடியாக இருந்த  தகவல் தொடர்பு துறையின் கடன்  மோடி பதவியேற்று ஓராண்டில் அதாவது 2015 டிசம்பரில் 3,80,000 கோடியாக உயர்ந்திருக்கிறது.

2g_twt

எனவே ஸ்பெக்ட்ரம் ஏலம் ஏமாற்றமாய் முடிந்ததற்கு மன்மோகன் சிங்கையோ முந்தைய காங்கிரஸ் அரசையோ குறை கூறாதீர்கள். அவர்கள் ஆட்சிகாலத்தில் இதைவிட அதிக தொகைக்கே ஏலங்கள் நடைபெற்றிருக்கிறது என்று நடுநிலையாளர்களும் சமூக வலைதளவாசிகளும் பாஜக தலைவர்களுக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.