தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமய்யா அறிவித்துள்ளார்.

வறட்சியால் தமிழகம் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில், ஏற்கெனவே தண்ணீர் தரமுடியாது என்று ஆந்திர மாநிலம் அறிவித்தது. இப்போது கர்நாடக மாநிலமும் அதே போல அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலமுதல்வர் சித்தராமய்யா, “கர்நாடக அணைகளில் நீர் குறைவாக உள்ளது. கர்நாடகத்தின் தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது.

ஆகவே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது” என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.