சென்னை:

சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்துக்கு இன்றுமுதல் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்துவிட கோரிக்கைகள் வந்துள்ளது.

அதனை ஏற்று இன்று முதல் சேர்வலாறு, மணிமுத்துஅணைகளில் இருந்து அடுத்த மாதம் 9-ஆம் தேதி முடிய வினாடிக்கு 1000 மில்லியன் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நெல்லை, பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள கிராமங்களில் 24 ஆயிரத்து 90 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என்றும், குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெறுமாறும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.