காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 14,784 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8.30 நிலவரப்படி 24,021 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 14,000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுவதோடு, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காகவும் 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம்119.61 அடியாகவும், நீர் இருப்பு 92.851 டி.எம்.சியாகவும் உள்ளது.