மேட்டூர் அணைக்கு வரும் நீரை விட, அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் நீர் திறந்துவிடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையில் நேற்று 51 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்றும் அதே அளவில் வந்துக்கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றிலிருந்து, 1,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால், அணைக்கு வரும் நீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்றொரு குற்றச்சாட்டை அப்பகுதி மக்கள் முன்வைக்கின்றனர். இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று 47.33 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று 47.17 அடியாக சரிந்துள்ளது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால், மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.