முன் ஜென்ம பாவங்களைக் கண்டறிந்து அதனைத் தீர்ப்பது எப்படி?

தற்கு முந்தைய ஜென்மங்களில் நாம் செய்த பாவங்களை அறிந்து தீர்வு காணும் வழி

எல்லாம் நன்றாக இருந்தும் ஏதோ ஒன்று நம் முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டே இருக்கும். அப்படித் தடுத்துக் கொண்டிருக்குமானால் அது நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த பாவங்களின் பிரதிபலனாகக் கூட இருக்கலாம்.

நம்முடைய நிகழ்காலம் அனைத்தும் நாம் சரியாகச் செய்தும், ஏதோ ஒன்று அந்த செயலை தடுத்து நீங்கள் நினைத்த காரியத்தை அடைய முடியாமல் ஆகிவிடுகிறது. அதற்கு நம்மில் பலர் முன் ஜென்மத்தில் நாம் என்ன தவறு செய்தோமோ என்று எண்ண வைத்து விடுகிறது. அப்படி நம் முன் ஜென்மத்தில் செய்த பாவங்களைக் கணக்கிட்டு இந்த ஜென்மத்தில் அதற்கான பலன் அல்லது தண்டனை, சிறு குறைகள் நம்மில் பலருக்கும் நிகழ்ந்து இருக்கும்.

அதனை நிவர்த்தி செய்யப் பல வழிகள் உள்ளன. அதாவது எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதனைத் தீர்த்து வைக்கும் வல்லமை நமது குல தெய்வத்திற்கு உண்டு. அந்த குலதெய்வ வழிபாட்டை முறையாக கடைபிடிக்க வேண்டும். நம்முடைய குல தெய்வம் எந்த தெய்வம், நம் முன்னோர்கள் எந்த குல தெய்வத்தை வழங்கினார்கள் எனக் கண்டறிந்து குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.

அடுத்ததாக நம் முன்னோர்கள் வழிபாடு. முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்து விடவேண்டும். அவர்களுக்காக அமாவாசை விரதம் கட்டாயம் இருக்க வேண்டும். எள், தண்ணீர் வைத்து முன்னோர்களின் ஆசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பசுவிற்கு வெல்லம், வாழைப்பழம், அகத்திக் கீரை போன்றவற்றைக் கொடுக்கலாம். காகத்திற்குத் தினமும் மதிய உணவு படைக்க வேண்டும். இது நமது முன் ஜென்ம வினையைக் குறைக்கக் கூடிய பரிகாரங்களில் ஒன்று.

ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சென்று நமது இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு பிரார்த்திக்க வேண்டும். பின்னர், வீட்டிற்கு வந்து பூஜையறையில் நமது குலதெய்வத்தை மனதார நினைத்து வேண்டிக் கொண்டு அரச மர இலைகளை மூன்று மூன்றாகப் பிரித்து அதன்மீது உப்பை வைத்து பின்னர் உதிரிப் பூக்களை அதன் போட்டுக்கொள்ளுங்கள். அப்படியே அதன் மீது அகல் விளக்குகளை வைத்து 9 அகல் விளக்குகள் வைத்து வழிபடுங்கள். இதனை 9 அமாவாசைகள் தொடர்ந்து செய்வதன் மூலம் நம்முடைய பாவ வினைகளில் இருந்து நமக்கு மோட்சம் கிட்டும்.

நாம் கோவிலுக்குச் செல்லும் போது சண்டிகேசுவரரைக் கண்டிப்பாக வணங்க வேண்டும். நம்முடைய முன் ஜென்ம பாவங்கள் எல்லாம் தீர்த்து வைக்கும் ஆற்றல் கொண்டவர் சண்டிகேஸ்வரர். அவரை வேண்டிக் கொண்டு அன்னதானம் செய்யலாம். அது நமது முன் ஜென்ம பாவங்களைப் போக்க வல்லது.