அழகு என்றால் எல்லோரும் விரும்பும் ஒன்று அந்த அழகு முகத்தில் கரும்புள்ளி சருமத்தின் அழகை கெடுத்து விடும். முகத்தில் தங்கியிருக்கும். கிருமிகள், இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் தங்கி கரும்புள்ளிகளாக வெளிப்படுகிறது. இந்த கரும்புள்ளிகளை அகற்றுவது மிகவும் எளிதாகும்.

இதற்கான முதல் வழி சருமத்தை சுத்தமாக வைத்திருப்பதே ஆகும். முகத்திற்கு  சோப்பை போட்டு தேய்ப்பதால் வறட்சி அதிகமாகுமே தவிர, ஆழமான சென்று இந்த கரும்புள்ளியை நீக்காது.

நம் சருமத்தை சுத்தப்படுத்தி கரும்புள்ளியை நீக்குவதற்கான எளிய முறைகளைப் பார்போம்.

உருளைகிழங்கு மசாஜ் :

உருளைக்கிழங்கை நறுக்கி அதன் சாறு முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவும். இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் கரும்புள்ளிகள் படிப்படியாக குறையும்.

வெந்தய கீரை :

வெந்தயக் கீரையை நன்கு சுத்தப் படுத்தி அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவும். பின் அதனை முகத்தில் முழுவதும் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவாக முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும்.

கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் போட்டு கொண்டு காயவைத்து கழுவ  கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை மட்டும் செய்யவும்.

தயிருடன் எலுமிச்சை :

இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் மற்றும் முகத்தில் இருக்கும் சிறு துளைகளும் மறைவும்.

சர்க்கரை மற்றும் எலுமிச்சை :

மேலும் எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி கொஞ்ச நேரம் மசாஜ் செய்து கழுக வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று இருக்கும்.

எப்போதும் முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதால் மட்டுமே நாம் முகம் அழகாக இருக்க உதவும்.