சென்னை:

போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு தொடர்பான வழக்கில், போலியோ தடுப்பு விழிப்புணர்வுக்கு ஒத்துழைப்பு தர நடிகர்கள் தயாராக இருப்பதாக நடிகர் சங்கம் உயர்நீதி மன்றத்தில் பதில் தெரிவித்து உள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து தவறாமல் வழங்கும் வகையில்   பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதிகள், கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  போலியோ குறித்து, மக்களிடம்  பேமசாக உள்ள நடிகர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால், மக்களை எளிதில் சென்றடையும் என கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து, தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் மற்றும் நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோரை இவ்வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க நீதிபதிகள் ஆணையிட்டனர்.

அதைத்தொடர்ந்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய், அஜித், சூர்யா தரப்பில் இன்று ஆஜரான வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பில் தமிழகத்தில் பல்வேறு சேவைகளை செய்து வருவதாக தெரிவித்னர்.

மேலும், தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  போலியோ தடுப்பு விழிப்புணர்வுக்கு ஒத்துழைப்பு தர நடிகர்கள் தயார் கூறினார். நடிகர் சங்கத்தின் விளக்கத்தை ஏற்று வழக்கை மார்ச் 28 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.