சென்னை:
நாங்கள் வளர்ச்சியை மையமாக வைத்து செயல்படுகிறோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், பாஜகவை அப்புறப்படுத்தவும், அதிமுகவை தூக்கி எறியவுமே இந்த தேர்தல் பிரச்சாரம் என்றும், நாங்கள் வளர்ச்சியை மையமாக வைத்து செயல்படுகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் நீட் தேர்வில் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சமூக நீதிக்கு எதிரான மனுவை உடனடியாகத் திரும்பப் பெறவில்லையெனில், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என கே.எஸ்.அழகிரி எச்சரித்தார்.