சென்னை,

றைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சை காரணமாக, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரது சிகிச்சை குறித்து எந்தவித படமோ, வீடியோவோ எடுக்கப்படவில்லை என்று கூறி வந்த நிலையில் தற்போது வீடியோ உள்ளது என்று கூறியிருப்பது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஜெ., சிகிச்சை பெறும் போது சசிகலா எடுத்த வீடியோ தங்களிடம்தான் உள்ளது என்று தெரிவித்தார்.

மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சசிகலா எடுத்த வீடியோ தான் என்னிடம் உள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பொதுவாக அரசியல் வாதிகள் மீது நம்பகத்தன்மை நம் நாட்டில் குறைந்துள்ளது என்ற டிடிவி, ஆனால், தொலைக்கட்சிகள் வந்த பின்னர், மாற்றி பேச முடியாது. அப்படி பேசினால் ஊடகங்கள் காட்டுகிறதோ இல்லையோ இளைஞர்களே தோலுரித்து காட்டி விடுவார்கள் என்றார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்பு,  சிறு சலசலப்பு கூட இல்லாமல் பன்னீர்செல்வத்தை சசிகலா முதல்வராக்கினார். ஆனால், அவரது நடவடிக்கை சரி இல்லை என இப்போது உள்ள அமைச்சர்கள் நாள்தோறும் வந்து புகார் கூறினார்கள். சசிகலா பொதுச் செயலாளராக வேண்டும் எனவும், முதல்வராக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து, இவர்களே பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவை பொதுச் செயலாளராக்கினர் என்றார். என்றார் தினகர்ன.

அதிமுக, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது. பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றால் பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து பொதுச் செயலாளர் அனுமதி அளித்த பின் தான் தான் கூட்ட வேண்டும்.

தற்போது எடப்பாடி தலைமையில் நடைபெற்றது பொதுக்குழு கூட்டமே அல்ல என்ற டிடிவி,. பதவியை தக்க வைப்பதற்காக அமைச்சர்கள் மாறிமாறி பேசி வருகின்றனர்.

தற்போது, அமைச்சர்களின் தரம் தமிழக மக்களிடம் மோசமடைந்து வருகிறது. இருக்கிற வரை ஆதாயம் அடைய வேண்டும் என்பது தான் இபிஎஸ்-ஓபிஎஸ் எண்ணம். பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலை சந்தியுங்கள்.

தற்போது திடீரென ஜெயலலிதா மரணம் குறித்து திடீரென சந்தேகம் கிளப்புவது ஏன்? என கேள்வி எழுப்பிய டிடிவி , அவர் மரணம் தொடர்பாக கேள்வி எழுப்புவது திட்டமிடப்பட்ட சதி.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ அல்ல இன்டர்போல் கூட விசாரிக்கட்டும். அதுகுறித்து கவலை இல்லை. ஓய்வு பெற்ற நீதிபதியை விட, மூத்த நீதிபதிகளை கொண்டு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பது சிறந்தது என்றார்.

மேலும், என்னிடம் சிசிடிசி காட்சிகள் உள்ளது என கூறவில்லை.  மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் போது சசிகலா எடுத்த வீடியோ தான் உள்ளது.

ஜெயலலிதா எடை குறைந்து நைட்டியுடன் இருந்ததால் வெளியிட வில்லை. தேவைப்பட்டால் நீதி விசாரணையின் போது அந்த வீடியோவை தாக்கல் செய்வோம் என்றும் தினகரன் விளக்கமளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.