ஸ்ரீநகர்: டெல்லி பறித்ததை திரும்ப பெற போராட்டத்தை நாம் தொடர வேண்டும் என கடந்த ஓராண்டுக்கும் மேலாக வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டு, நேற்று விடுதலை செய்யப்பட்ட  மெகபூபாப முக்தி ஆடியோ மூலம் செய்தி வெளியிட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்முகாஷ்தின் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்தியஅரசு, அதை இரு மாநிலங்களாக பிரித்தது. முன்னதாக, மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்கட்சித் தலைவர்கள், பிரிவினைவாதிகள் என பலரை பொது பாதுகாப்புச் சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ்  வீட்டுக்காவலில் சிறை வைத்தது. அவர்களில் பலர் விடுதலையான நிலையில், முன்னாள் முதல்வர்  மெகபூபா முக்தி மட்டும் விடுதலை செய்யப்படாமல் இருந்தார். இது தொடர்பாக உச்சநீதிமன்றமும் கேள்வி எழுப்பிய நிலையில்,  பதினான்கு மாதங்களுக்குப் பிறகு, பொது பாதுகாப்புச் சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ் ஜம்மூ-காஷ்மீர் அரசாங்கம் தனது காவலை ரத்து செய்ததை அடுத்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி நேற்று  விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, தனக்காக குரல் எழுப்பியவர்களுக்கு நன்றி தெரிவித்து டிவிட் பதிவிட்டிருந்தார், அதில்,  சட்டவிரோத தடுப்புக்காவல் இறுதியாக முடிவுக்கு வருவதால், இந்த கடினமான காலங்களில் என்னை ஆதரித்த அனைவருக்கும்  நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும், . உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன் அல்லாஹு அல்லா, இன்ஷா அல்லா என்று குறிப்பிட்டிருந்தார். இதை அவரது மகள்  இல்டிஜா ரிடிவிட் செய்திருந்தார்.

இதையடுத்து மெகபூபா முக்தி வெளியிட்ட ஆடியோ செய்தியில், ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஆகஸ்ட் 5 ம் தேதி நடந்த “கொள்ளை மற்றும் அவமானத்தை” மறக்க முடியாது, யூனியன் பிரதேசம் மற்றும் வெளியே உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளையும் விடுவிக்க வேண்டும்.  டெல்லி சட்டவிரோதமாகவும், ஜனநாயக விரோதமாகவும், அரசியலமைப்பற்றதாகவும் நம்மிடமிருந்து பறித்ததை நாம் திரும்பப் பெற வேண்டும். இதற்காக, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான போராட்டத்தை நாம் தொடர வேண்டும்.  இந்த பாதை எளிதானது அல்ல என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் இந்த சாலையைக் கடக்க தைரியமும் உறுதியும் நமக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்”

இவ்வாறு அவர் பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.