மும்பை: எவ்வளவு ரன்கள் குவித்தாலும், எதிரணிக்கு மரியாதை கொடுப்பதும், பணிவுடன் இருப்பதும் அவசியம் என்று கருத்து தெரிவித்துள்ளார் சிஎஸ்கே கேப்டன் தோனி.

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், சென்ன‍ை அணி 220 ரன்களைக் குவித்தது. பதிலுக்கு ஆடிய கொல்கத்தா அணி, குறைந்த ரன்களிலேயே அதிக விக்கெட்டுகளை இழந்துவிட்டபோதும், கடைசிகட்ட பேட்ஸ்மென்கள், சென்ன‍ை அணியை ஒரு மிரட்டு மிரட்டிவிட்டனர். பிறகு, ஒருவழியாக 18 ரன்களில் சென்னை அணி வென்றது. இந்நிலையில்தான் இப்படி கருத்து தெரிவித்துள்ளார் தோனி.

அவர் பேசியுள்ளதாவது, “இதுபோன்ற ஆட்டம் எனக்கு எளிதானது என்றே நினைக்கிறேன். ஏனெனில் 15 மற்றும் 16வது ஓவரில் இருந்து ஆட்டம் பேட்ஸ்மேனுக்கும், வேகப்பந்து வீச்சாளருக்கும் இடையே இருந்தது. 20 ஓவர்கள் வரை முழுமையாக சென்றிருந்தால் ஆட்டம் மேலும் நெருக்கமாக இருந்திருக்கும்.

எவ்வளவு ரன்கள் அடித்தாலும், பணிவுடன் இருப்பதும், எதிரணிக்கு மரியாதை கொடுப்பதும் முக்கியம். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் பெரிய ஹிட்டர்கள் உள்ளனர்.

ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெஸிஸ் ஆகியோர் தங்களது அற்புதமான பேட்டிங்கால் சிறந்த அடித்தளம் அமைத்து கொடுத்தனர். நாம் அதிக ரன்கள் எடுத்துள்ளோம், ஆனால் நாம் பணிவுடன் இருக்க வேண்டும் என சக அணி வீரர்களிடம் கூறினேன்.

ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு எதிராக ஜடேஜாவைப் பயன்படுத்துவதே விருப்பமாக இருந்தது. ஏனெனில் பந்து ஆடுகளத்தில் நின்றும், சுழன்றும் வந்தது. ரஸ்ஸலை போல்டாக்குவதற்கு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை” என்றார்.