பாரிஸ்: கொரோனா பாதிப்பிலிருந்து மீள இந்தியாவிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்க தயார் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3.32 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறி இருப்பதாவது: கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவாக இருக்கும்.

இந்த பேரிடரில் இருந்து மீள இந்தியாவிற்கு அனைத்து வகைகளிலும் ஆதரவளிக்க தயார் என்றார். முன்னதாக கொரோனாவின் தீவிர பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் இந்திய விமானங்களுக்கு தற்காலிகத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.