சென்னை:

தேமுதிக தலைவர் விஜயகாந்தை  நடிகர் சரத்குமார் இன்று திடீரென்று அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து பேசினார். அப்போது அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்ததாகவும், பொதுவான அரசியல் நிலவரம் குறித்துபேசியதாக தெரிவித்தார்.

தமிழக அரசியல் கட்சிகளிடையே கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், விஜயகாந்தின் தேமுதிகவை இழக்க அதிமுக, திமுக கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன.

இந்த நிலையில், திமுக. தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் விஜயகாந்தை சந்தித்து பேசிய நிலையில், இன்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று  சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்துக்கு சென்று விஜயகாந்தை  சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், விஜயகாந்திடம் பொதுவாக அரசியல் நிலவரம் குறித்து  பேசியதாகவும், தம்முடைய கருத்துகளை விஜயகாந்திடம் தெரிவித்ததாகவும் கூறினார்.