மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிராக நடக்கவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில், தங்கள் அணிக்கு சாதகம் கூடுதலாக உள்ளது என்றுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்.

அவர் கூறியுள்ளதாவது, “எங்களுக்கு இந்திய அணியைவிட, பிங்க் நிற பந்தில் கூடுதல் அனுபவம் உள்ளது. இது எங்களுக்கான ஒரு சிறிய சாதகம். கொல்கத்தாவில் வங்கதேச அணிக்கு எதிராக நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில், இந்தியா சிறப்பாக செயல்பட்டது.

அதுவேறு இதுவேறு என்றாலும்கூட, இந்திய அணியில் ஆபத்தில் கைகொடுக்கும் பேட்ஸ்மென்களும், தரமான வேகத்தோடு பந்துவீசும் வீரர்களும் உள்ளனர். இந்திய அணியினர் எந்த சூழலிலும் ஆடும் உலகத்தரம் வாய்ந்தவர்கள். எனவே, இரு அணிகளுக்கு இடையிலான போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்” என்றார் ஸ்மித்.

இந்தியா – ஆஸ்திரேலியா மோதும், பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான பகலிரவு டெஸ்ட் போட்டி, அந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியாகும். இந்தாண்டு டிசம்பர் 11ம் தேதி இப்போட்டி நடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.