மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில், காதலர் தினமான இன்று  “நாங்கள் யாரையும் காதலிக்க மாட்டோம் என மாணவிகள் உறுதி மொழி’ எடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி உலக எங்கிலும் காதலர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு பெண்கள் கல்லுரியில்,  கல்லூரி நிர்வாகம் அங்கு படிக்கும் மாணவிகளை ,  ‘நாங்கள் யாரையும் நேசிக்க மாட்டோம், காதலிக்க மாட்டோம்’ என கட்டாயப்படுத்தி மாணவிகள் உறுதிமொழி எடுக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ  சமூக ஊடகங்களில்   வைரலாகியுள்ளது. சுமார், 0.45 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், மாணவிகள் ‘நாங்கள் காதலிக்க மாட்டோம் யாரும் மற்றும் ஒருபோதும் காதல் திருமணம் செய்ய மாட்டோம்’ என கூறியுள்ளனர். அந்த வீடியோவை மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.  மேலும் வீடியோவில், பல சிறுமிகள் வரிசையாக நின்று ஒரு நபருக்குப் பிறகு சத்தியம் செய்வதைக் காணலாம்.