புதுடெல்லி:

மோடி பண மதிப்பிழப்பு செய்ததை நாங்கள் பண மதிப்பு செய்வோம் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தி கூறியதாவது:

எங்கள் கட்சியின் வறுமை ஒழிப்பு திட்டத்துக்கு பாஜகவினர் தடை போடுகின்றனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெக்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டார்.
அவர் ஆட்சியில் செய்யப்பட்ட பணமதிப்பிழப்பால் வீழ்ந்த பொருளாதாரத்தை உயர்த்துவோம் என்றார்.