திருச்சி: திருச்சியில் கொரோனா முடிவுகளை தெரிந்துகொள்ள இணையதள முகவரி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் 24 மணி நேரத்தில் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சியில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,265 ஆக உயர்ந்துள்ளது. 977 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை 35 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இந் நிலையில் திருச்சியில் கொரோனா முடிவுகளை தெரிந்துகொள்ள இணைய தள முகவரி முறை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பரிசோதனை முடிவுகளை தெரிந்துகொள்ள இனி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியது இல்லை. cv19.microkapa.in என்ற இணையதளத்தில் கொரோனா முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.