துபாய்:
லிமையுடன் மீண்டு வருவோம். அப்படி மீண்டு வருவதுதான் எங்களின் வழக்கம் என்று அந்த அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 9 விக்கெட் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சிஎஸ்கே. இருப்பினும், 6 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. போட்டி முடிந்த பின்னர் பேசிய தோனி, இது மிகவும் வித்தியாசமான ஒரு சீசனாக அமைந்துவிட்டது. எங்களுடைய வீரர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. வலிமையுடன் மீண்டு வருவோம். அப்படி மீண்டு வருவதுதான் எங்களின் வழக்கம். நாங்கள் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறோம். இன்னும் இரண்டு புள்ளிகள் இருந்திருந்தால் ப்ளே ஆஃப்க்கு செல்ல வாய்ப்பாக இருந்திருக்கும். இந்த சீசனில் தான் ஒரே ஒரு டீம் சிறப்பாக விளையாடியுள்ளது. அல்லது பெரும்பாலான அணிகள் சிறப்பாக விளையாடியுள்ளது என்றார்.