கொல்கத்தா:

பெங்காலி செய்தி சேனல் ஒன்றுக்கு மேற்கு வங்க மம்தா பானர்ஜி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ அரசயில் ஆதாயத்துக்காக அரசியல் கட்சி ஒன்று என்னை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியுள்ளது.

என்னை கொலை செய்யும் பணி கொடுக்கப்பட்டு உள்ள நபர்கள் என்னுடைய வீடு, அலுவலகம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளை எல்லாம் உளவு பார்த்துவிட்டார்கள். ஏற்கனவே அரசியலில் எதையும் எதிர்க்கொள்ள தயாராகிவிட்டேன். எனக்கு எதிரான சதி திட்டத்தால் என்னுடைய கட்சிக்கு பிரச்சனையை ஏற்படுத்திவிட முடியாது’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘பாதுகாப்பை பலப்படுத்த வீட்டை மாற்றுமாறு உளவுத் துறை அறிவுரை வழங்கியுள்ளது. என்னுடைய மக்களை நான் விரும்புகிறேன். அவர்களின் வளர்ச்சிக்காக நான் பணியாற்றுவேன் என்னை யாரும் மிரட்டவும் முடியாது மக்களுக்கான என்னுடைய பணியை தடுக்கவும் முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.