டில்லி:

இரட்டை இலைச் சின்ன விவகாரத்தில் கைதான தரகர் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் துன்புறுத்தப்படுவதாக கூறிய புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என திகார் சிறைச்சாலை நிர்வாகத்துக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தைப் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டில்லி காவல்துறையினர் வழக்கு தொடுத்தனர்.

இதில் அ.தி.மு.க. துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரும் கைது செய்யப்பட்டார்.

டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது. சுகேஷூக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த நிலையில் சிறையில் சுகேஷ் சித்திரவைதை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் டில்லி உயர் நீதிமன்றத்துக்குச் சென்றது.

இதையடுத்து சுகேஷ் சந்திரசேகர் சிறையில் துன்புறுத்தப்படுவதாக கூறிய புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என திகார் சிறைச்சாலை நிர்வாகத்துக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

“மோசமான கிரிமினல் கைதிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள சிறை அறையில் சுகேஷை அடைத்தது ஏன்” என்றும் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கேள்வி எழுப்பினார்.

சுகேஷ் சிறையில் துன்புறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் , திகார் சிறை நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் விசாரைண ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.