பிரிஸ்பேன்: இதற்கு முன்னர், இந்தியாவைவிட முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் முன்னிலைப் பெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தோற்றுள்ளது என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1979ம் ஆண்டு, ஆஸ்திரேலிய மண்ணில், இந்தியா – ஆஸ்திரேலியா மோதிய டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது.

அதேபோன்று, கடந்த 2003ம் ஆண்டு நடைபெற்ற அடிலெய்டு டெஸ்ட்டில், இந்தியா – ஆஸ்திரேலியா மோதிய போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்தியாவைவிட 33 ரன்கள் முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா. ஆனால், அப்போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது ஆஸ்திரேலியா.

தற்போது, இந்த பிரிஸ்பேன் டெஸ்ட்டிலும், இந்தியாவைவிட, முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் முன்னிலைப் ப‍ெற்றுள்ளது. இந்தப் போட்டியும் அவர்களுக்கு பாதகமாக அமையுமா?