நெட்டிசன்:

#ரா_பிரபு- முகநூல் பதிவு

காட்டின் இரண்டு பெரும் தலைகள்.. தேர்ந்த வேட்டைகாரர்கள்… கொடூர கொலையாளிகள் சிங்கம் மற்றும் புலி.
இவைகள் இரண்டிற்கும் இடையிலான சில சுவாரஷ்யமான ஒற்றுமை வேற்றுமை பற்றி பார்க்கலாம்.

முதலில் ஒரு சுவாரஷ்யமான கேள்வி சிங்கம் புலி இவை இரண்டுமே பெரும் கொலையாளிகள் சிறந்த வேட்டை விலங்குகள். ஒரு வேளை இவை இரண்டுமே மோதி கொண்டால் இவற்றில் எது வெற்றி பெறும் ?

இந்த கேள்விக்கு பதில் அந்த விலங்கின் வயது அனுபவம் உடல் ஆரோக்கியம் எல்லாம் சார்ந்த விஷயம் தான் என்றாலும் பொதுவாக இவை இரண்டும் மோதி கொள்வதாக வைத்து கொண்டால் இவற்றில் வெற்றி பெறுவது எதுவாக இருக்கும் தெரியுமா ?

உங்களில் பல பேர் சிங்கம் என்று நினைத்திருந்தால் மன்னிக்கவும் அது தவறான விடை .இவை இரண்டும் மோதிக் கொண்டால் அதில் வெற்றி பெறுவது பெரும்பாலும் புலியாக தான் இருக்கும். அதற்கான காரணத்தை பார்க்கும் முன் அதற்க்கான ஆதார சம்பவம் சிலதை பார்க்கலாம்.

இதற்க்கு பண்டைய காலத்தில் இருந்தே ஆதாரங்கள் இருக்கின்றன..பழைய ரோம் நகரத்து பேரரசர்கள் மக்கள் சூழ பெரும் விளையாட்டு மைதானங்களில் சிங்கம் மற்றும் புலிகளுக்கு இடையில் சண்டை வைத்து வேடிக்கை பார்ப்பார்கள். அதில் பெரும்பாலும் புலியே வெற்றி பெற்றிருக்கின்றன. அதிகம் பணம் புலியின் மேல் தான் கட்ட பட்டு இருக்கின்றன. அதை பல ஓவியங்களில் கூட அவர்கள் வரைந்து வைத்து இருக்கிறார்கள். புலி வெற்றி பெறுவதை போன்ற பல பழங்காலத்து பெயிண்டிங்குகள் இன்றும் அங்கே காணலாம்.

1800 களில் baroda gaekwad ஒருவர்.. (பரோடா பகுதியை ஆளும் மன்னர்களை குறிக்கும் சொல்.. ) புலி சிங்கம் சண்டை ஒன்றில் கலந்து கொண்டார். அந்த சண்டையை நடத்தியவர் தனது புலி தான் ஜெயிக்கும் என புலியின் மேல் 37000 ரூபாய் பெட் கட்டி இருந்தார் அதை எதிர்த்து மன்னர் பணம் கட்டினார். இறுதியில் சிங்கத்தை புலி அடித்து வீழ்த்தி மன்னருக்கு பெரும் தொகையை (அந்த காலத்தில் 37000 ரூபாய் ) நஷ்டத்தை உண்டு பண்ணியது.

2011 இல் துருக்கியில் உள்ள ankara எனும் zoo வில் ஒரு முறை ஒரு புலி ஓரு சிங்கதை கொன்றது. அதை பார்த்தவர்கள் அது அதனை ஒரே ஒரு அடியில் அடித்து கொன்றதாக சொன்னார்கள்.
மேலும் அங்கே இருந்த ஆய்வாளர்கள் சிலர் புலிகள் அடிக்கடி தங்கள் கூண்டை விட்டு சிங்கத்தின் கூண்டில் சென்று இறையை தேடுவதாகவும் அப்போது சிங்கதை அடித்து கொல்வதாகவும் தெரிவித்து இருந்தனர்.

ஒரு முறை கிர் காடுகளின் சிங்கத்தை புலிகள் அதிகம் வாழும் பகுதியான kuno paplur எனும் இடத்திற்கு மாற்றுவதாக ஒரு திட்டம் வைத்து இருந்தார்கள். ஆனால் அந்த திட்டம் கைவிட பட்டது.
“The University of Minessota’s Lion Research Center ” அதற்க்கு சொன்ன காரணம் ‘அங்கே காலம் காலமாக வாழ்ந்து வரும் “பழங்குடி “புலிகள் இந்த புதிதாக வந்து சேரும் சிங்கங்களை அடித்துக் கொன்று விடும் என்று தாங்கள் பயந்துதான்’ என்றார்கள்.

புலிகள் சிங்கத்தை வெல்ல முடிவதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அடிப்படையில் அவைகள் சிங்கங்களை விட பல விஷயத்தில் தலை சிறந்தவை.
சரி சிங்கத்திற்கும் புலிக்கும் இடையிலான சில நடுநிலைமையான ஒப்பீட்டை பார்க்கலாம்.

முதலில் ஒரு சிங்கதை விட ஒரு புலி அளவில் பெரியது.. அதிக எடை கொண்டது.
உலகத்தில் உள்ள சிங்கங்களில் அதிக ஆக்ரோஷமான வலிமையான சிங்கம் என்றால் அது ஆப்ரிக்க சிங்கம் தான்.
ஒரு ஆப்ரிக்க சிங்கத்தின் எடை சராசரியாக 250 கிலோ.
அதே போல உலக புலிகளில் அதிக வலிமை கொண்ட பெரிய புலி என்றால் அது சைபிரியன் புலிகள் தான். அதன் சராசரி எடை 360 கிலோ.

ஒரு சிங்கத்தின் பல் 3. 2 அங்குல நீளம் கொண்டது ஆனால் ஒரு புலியின் பல் 3.6 அங்குலம்.. முதல் 4 அங்குலம் வரை.

சிங்கத்தின் கூர் நகங்கள் 3 அங்குல நீளம் கொண்டது. ஆனால் புலியின் நகங்கள் 4 அங்குலம்.
அப்படியே அகலத்தை பார்த்தால் சிங்கத்துக்கு 5 அங்குல அகலம். புலிக்கு 6.5 அங்குலம் அகலம்.

கால்களால் அறைவதில் சிங்கதால் சண்டையின் போது ஒரு நேரத்தில் ஒரு காலால் மட்டும் தான் அடிக்க முடியும் ஆனால் புலிகள் சண்டையில் இரண்டு காலில் நின்று இரண்டு காலால் சில சமயம் 3 கால்களால் தாக்கும்.

உடல் நீளம் சிங்கம் கிட்ட தட்ட 8..9 அடி என்றால் புலி 9 ..10 அடி

நீந்தும் திறமையில் புலி கில்லாடி சிங்கம் சோம்பேறி.

அதிக வெய்யிலில் மற்றும் மிக குறைவான வெளிச்சத்தில் நல்ல பார்வை திறனில் கிட்ட தட்ட இரண்டுமே ஒரே மாதிரி திறமை கொண்டவை.

Athletic ..body.. மற்றும் flexibility யில் புலிகள் சிறப்பானவை.

வேகம் என்று வரும் போது ஆன் புலியை விட பெண் சிங்கம் வேகமானது ஆனால் அதை விட பெண் புலி வேகமானது.

கடிக்கும் போது கொடுக்கும் அழுத்தம் (biting force ) சிங்கம் 600 psi (pounds per inch ) புலி 1000 psi
(ஒரு தொடர்பில்லாத தகவல் இங்கே சொல்கிறேன் உப்பு நீர் முதலை 3700 psi அழுத்தத்தில் கடிக்க முடியும் )

அடுத்து இரண்டில் யார் அதிக புத்தி சாலி ?? சந்தேகம் இல்லாமல் புலி தான்.
அதை எப்படி கண்டு பிடிக்கிறார்கள் என்றால்… Cranial Volume ஐ கொண்டு..
அதிக Cranial Volume என்றால் அதிக புத்திசாலித்தனம் என்று அர்த்தம்..
மேலும் செயல்திறன் சோதனையில் புலிகளின் புத்திசாலிதனம் தெரிகிறது.

கர்ஜனையில் பார்க்கும் போது நிச்சயம் சிங்கத்தை புலி மட்டும் அல்ல வேறு எந்த விலங்கும் அடித்து கொள்ள முடியாது. சிங்கத்தின் கர்ஜனை 8 லிருந்து 10 கிலோ மீட்டர் வரை கேட்கும் புலியின் கர்ஜனை 3 யிலிருந்து 5 கிலோ மீட்டர்.

இது தவிர முக்கியமான ஒரு சிறப்பான குணம் சிங்கத்திடம் உண்டு அது புலியிடம் இல்லை. அது தான் கூட்டு முயற்சி . team work இல் சிங்கங்கள் கில்லாடிகள். அவைகள் இனைந்து வேட்டை ஆடுகின்றன். கடினமான வேட்டையில் மானசிக வியூகம் திட்டம் அமைத்து வேட்டை ஆடுகின்றன . பெண் சிங்கம் மற்றும் குட்டி சிங்கங்கள் கடினமான வேட்டையில் திணற நேர்ந்தால் அதை வளர்ந்த ஆண் சிங்கம் எதிர்கொண்டு முடித்து கொடுக்கின்றன.

ஒரு நன்கு வேட்டை பயிற்சி அடைந்த சிங்க கூட்டணியை எந்த விலங்குகளும் வீழ்த்துவது மிக அரிது.
சிங்கம் ஒரு சமூக விலங்கு. ஆனால் புலி எப்போதும் தனி ஒருவன். அவைகளுக்கு கூட்டு முயற்சி என்றால் என்ன என்றே தெரியாது. புலி தனித்து மட்டுமே வேட்டை ஆடுகின்றன.

எனவே ‘சிங்கம் சிங்கிளாதான் வரும்’ என்ற சினிமா வசனத்தை விட நமது பேச்சு வழக்கில் உள்ள “ஒற்றை புலி, ஒண்டி புலி ” போன்ற வாசகம் உண்மையானது.

சிங்கத்திடம் இருக்கும் இன்னோரு தனி தன்மை என்ன வென்றால் அவைகள் தங்கள் ராஜ்யங்களை ஆளும் குணம் கொண்டவை. தங்கள் எல்லையை பராமரிப்பது அதற்குள் யாரையும் அனுமதிக்காமல் போராடி காப்பது எல்லையை விரிவு செய்வது தங்கள் ராஜ்யத்திற்கு ஆபத்து என்றால் உயிரை கொடுத்து போராடுவது.. எதிரி பகுதியை ஆக்கிரமிக்க முயல்வது போன்ற குணாதிசயங்கள் மற்ற விலங்குகளிடமும் இருக்கிறது என்றாலும் சிங்கத்திடம் அது மிக அதிகம்.

எல்லாவற்றிற்கும் மேல் வேட்டை நுட்பத்தில் சண்டை நுட்பத்தில் சிங்கங்கள் கைதேர்ந்தவைகள். சமயத்துக்கு சூழ்நிலைக்கு ஏற்றார் போல புதிய நுட்பங்களை உண்டாக்க கூடியது.

கூட்டமாக உள்ள சிங்கத்திடம் புலி ஜெயிக்க முடியாது ஒற்றைக்கு ஒற்றை ஆட்டத்தில் புலியை சிங்கம் ஜெயிக்க முடியாது.

ஒரு அடிபட்ட புலியை விட ஆபத்தான விலங்கு வேறு எதுவும் இல்லை என்பார்கள். ஆம் அடி வாங்கி விட்டால் அவைகள் இன்னும் ஆபத்தானவை.

காட்டு விலங்குகள் என்றைக்குமே வியப்பானவை.. அதில் இவை இரண்டுமே மிக சுவாரஷ்யமான காட்டுத்தனமான முரட்டு படைப்புகள் தான். ஆனால் அதில் சிங்கம் தானே அரசன் என்கிறார்கள்.

ஆம்…சிங்கம் தான் காட்டின் அரசன். அவைகள் தான் காட்டை ஆளுகின்றன.
ஆனால்…..

அதற்கு காரணம் புலிக்கு ஆட்சி அதிகாரத்தில் ஆசை இல்லாமல் இருப்பது தான்.

(உலகை ஆள நினைப்பவர்கள் தங்கள் சின்னமாக சிங்கத்தை தேர்ந்தெடுத்ததும் … அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடியவர்கள் தங்கள் சின்னமாக புலியை தேர்ந்தெடுத்ததும் தற்செயலானது தானா ??? )