சென்னை:

ரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறி அரசியலுக்கு வருவதாக அறிவித்து, தனது ரசிகர் மன்ற நிர்வாகி களை உசுப்பேற்றி வரும் ரஜினி, அரசியல் தொடங்க பலமான அடித்தளம் போடுவதால் கால தாமதம் ஆகும் என்று இன்று கூறிய நிலையில், புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ரஜினி நடித்துள்ள 2.0, காலா திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்து வெளிவர உள்ள  நிலையில், மீண்டும் புதிய படத்தில் ரஜினி ஒப்பந்தம் ஆகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி படங்களை இயக்கியவர் கார்த்தி சுப்புராஜ்.

இவர் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா படத்தில் இடம்பெற்ற அசால்ட் சேது என்ற கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பியதாக ரஜினி ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது அவரது புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறியுள்ள ரஜினி, சன் நிறுவனம் ஏர்செல் மேக்சிஸ், சட்டவிரோத தொலைபேசி இணைப்பு போன்ற பல வழக்குகளில் சிக்கி வழக்குகளை சந்தித்து வரும் நிலையில், அந்நிறுவன தயாரிப்பில் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கபாலி பட ரீலிசின்போது, சில நாட்கள் தனது ரசிகர் மன்றத்தினரை அழைத்து பேசிய ரஜினி, கபாலி படம் வெற்றியானதை தொடர்ந்து, தற்போது காலா படத்தின் ரிலிசை எதிர்நோக்கி உள்ள நிலையில், மீண்டும் தனது ரசிகர் மன்றத்தினரை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சி தொடங்கி உள்ள கமல், இனிமேல் படத்தில் நடிக்கமாட்டேன் என்று உறுதி அளித்து அரசியலில் குதித்துள்ள நிலையில், ரஜினியின் அரசியல் அறிவிப்பு ஏமாற்று வேலை என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.