நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் திளைத்துகொண்டிருந்தபோது, வாட்ஸ்அப் தனது சேவையில் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர முடியாமல் தடங்களை ஏற்படுத்தியது.

சுமார்  ஒரு மணி நேரத்துக்கும் மேலாக  வாட்ஸ் ஆப் எந்தவித உந்துதலும் இல்லாமல் திகைத்து நின்றுவிட்டது. இது இளைஞர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

புத்தாண்டு வாழ்த்துக்களை தங்களது உறவினர்கள், நண்பர்களிடையே பகிர வாட்ஸ்அப் சேவையை எதிர்நோக்கிய கோடிக்கணக்கானோர் இருந்தனர்.  ஆனால், அவர்களை ஏமாற்றும் விதமாக சுமார் 2 மணி நேரம் வாட்ஸ்அப் சேவையில் தடங்கல் ஏற்பட்டது.

இதன் காரணமாக புத்தாண்டு வாழ்த்துக்களை   நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நள்ளிரவில் புத்தாண்டு பிறந்த தருணத்தில் வாழ்த்துக்களைப் பரிமாற எண்ணியவர்கள் ஏமாந்து போயினர்.

இதனிடையே, சேவையில் ஏற்பட்ட இடையூறுக்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.