சென்னை: பாஜக ஆட்சியதிகாரத்தில் தூக்கிய எறியப்படும் நாள் நிச்சயம் வரும்  என்று  நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மருந்து மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு பல மாநிலங்களில் நிலவி வருகிறது. இந்தநிலையில், கொரோனா தடுப்புபூசியின் விலையையும், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்  இரு மடங்காக உயர்த்தி உள்ளது. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நடிகர் சித்தார் காட்டமாக விமர்சித்துள்ளார். பாஜக எப்போது ஆட்சியதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படுகிறதோ, அப்போது தான் இந்த நாடும் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அர்த்தம் அந்த நாள் நிச்சயம் வரும் என தெரிவித்துள்ளார்.,