சென்னை,

ரும் 22ந்தேதி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேசன் கடைகள்  முன்பு திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

சர்க்கரை விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் ரேசன் கடைகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட் அறிவிப்பு மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த போராட்டம் வரும் 22ந்தேதி நடைபெறும் என்று ஸ்டாலின் கூறி உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்,  ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து நவம்பர் 1ம் தேதி அனைத்து ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தோம். ஆனால் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் வரும் 22ம் தேதி நடைபெறும் என்றார்.

மேலும்,  மின்சார மீட்டர் கொள்முதல் விவகாரத்தில் நான் தவறான தகவல் ஏதும் கூறவில்லை. கொள்முதல் செய்ய உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.  நான் தவறான தகவல் கூறுவதாக நினைத்தால் அமைச்சர் தங்கமணி என் மீது வழக்கு தொடரலாம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.