சென்னை:

டிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பேச்சாளர்கள் யார் என்ற விவரத்தை அறிவித்துள்ளார். முதல் கட்டமாக 10  பேச்சாளர்களை நியமனம் செய்துள்ளார்.

கடந்த மாதம் 21ந்தேதி மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சி தொடங்கிய கமலஹாசன், கட்சி தொடர்பான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

இந்நிலையில், கமல் கட்சியை நிர்வகிக்க ஏற்கனவே 15 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ள கமல், தற்போது 10பேர் கொண்ட பேச்சாளர்களையும் நியமனம் செய்து அறிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பட்டியலில், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மவுரியா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், தயாரிப்பாளர் கமீலா நாசர், பேராசிரியர் கு.ஞான சம்பந்தன், இயக்குனர் முரளி அப்பாஸ், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரங்கராஜன், தொழில் அதிபர்கள் சிவராமன், சவுரி ராஜன், நடிகை ஸ்ரீபிரியா, பாடலாசிரியர் சிநேகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.