COVAX உலகளாவிய தடுப்பு மருந்து திட்டம் என்பது உலகின் வசதி படைத்த நாடுகள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களிடம் இருந்து நிதி திரட்டி COVID-19 தடுப்பு மருந்தை உருவாக்கி உலகெங்கிலும் சமமாக விநியோகிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.

ஒன்பது மருந்து உருவாக்குனர்களின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிசீலித்து வருகிறது என்று தலைமை டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார். இவற்றில் இருந்து நான்கு மருந்துகள் COVAX பங்கெடுக்க தேர்வாகலாம் என்று அறியப்படுகிறது.

COVAX உலகளாவிய தடுப்பு மருந்து திட்டம் என்பது  வசதிபடைத்த நாடுகளிடமிருந்தும், இலாப நோக்கற்ற நிறுவனங்களிலிருந்தும் நிதி திரட்டி  COVID-19 தடுப்பூசியை உருவாக்கி உலகெங்கிலும் சமமாக விநியோகிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இது 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இரண்டு பில்லியன் அளவிலான செயல்பாட்டுத் திறனுள்ள அங்கீகரிக்கப்பட்ட COVID-19 தடுப்பு மருந்துகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உலக சுகாதார நிறுவனம், GAVI தடுப்பு மருந்து உருவாக்கும் நிறுவனம் மற்றும் தொற்றுநோய் தயாரிப்பு கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி (CEPI) ஆகியவற்றுடன் வழிநடத்தப்படுகிறது.

COVAX என்பது ஒரு உலகளாவிய அளவில் மேற்கொள்ளப்படும் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது COVID-19 கருவிகள் (ACT) முடுக்கி என அழைக்கப்படுகிறது. இது தொற்றுநோயை எதிர்த்து தடுப்பூசிகள், சிகிச்சைகள், கண்டறியும் சோதனைகள் மற்றும் பிற சுகாதார வளங்கள் பரவலாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் செயல்படுகிறது. 172 நாடுகள் COVAX உடன் ஈடுபட்டுள்ளன, மேலும் இது உலகின் மிகவும் மாறுபட்ட தடுப்பு மருந்து துறை ஆகும். தற்போது ஒன்பது COVID-19 தடுப்பு மருந்துகள் இத்திட்டத்தின் கீழ் மதிப்பாய்வு செய்யப்படுவதாக WHO தலைவர் கூறினார். மேலும் நான்கு மருந்துகள் விவாதத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். “இது அனைத்து உற்பத்தியாளர்கள் மற்றும் நாடுகளின் நலனுக்காகவே. இது அபாயங்களை ஒன்றிணைப்பது மட்டுமல்லாமல், முடிந்தவரை விலையைக் குறைக்கவும் செய்யப்படும் என்பதையும் குறிக்கிறது, ”என்று கெப்ரேயஸ் ஒரு ஊடக மாநாட்டில் கூறினார்.

GAVI நிறுவன தடுப்பு மருந்துகள் கூட்டணியின் படி, தற்போது, 75 க்கும் மேற்பட்ட நாடுகள் COVID-19 தடுப்பு மருந்துகளுக்கு உலகளவில் விரைவான மற்றும் சமமான அணுகலை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்ட COVAX நிதி திட்டத்தில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளன. பொது வரவுசெலவுத் திட்டங்களில் இருந்து தடுப்பு மருந்துகளுக்கு நிதியளிக்கும் 75 நாடுகள், GAVI நிறுவனத்தின் கோவாக்ஸ் அட்வான்ஸ் மார்க்கெட் கமிட்மென்ட் (ஏஎம்சி) க்கு தன்னார்வ நன்கொடைகள் மூலம் ஆதரிக்கப்படும் 90 ஏழை நாடுகளுடன் கூட்டணியில் உள்ளன என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்களைப்  பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கங்களிடமிருந்து வரும் ஆர்வம், COVID-19 தடுப்பூசிகளுக்கு உலகளாவிய அணுகலைப் பெறுவதற்கான முயற்சியில் “நம்பிக்கை வாக்கெடுப்பை” காட்டுகிறது.