டெர்பி:

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து, இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜிடம், செய்தியாளர் ஒருவர் உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட்டர் யார் என்று கேள்வி எழுப்பினார்.

இதனால் எரிச்சலடைந்த  மித்தாலி, விராட் கோலியிடம் இதுபோன்று  உங்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் யார் என்று  கேட்பீர்களா என்று  பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார்.

அப்போது, செய்தியாளர் ஒருவர்,  இந்தியா-பாகிஸ்தான் அணிகளில் உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்டார்.

இதனால் எரிச்சல் அடைந்த மித்தாலி,  “ஆண் கிரிக்கெட் வீரர்களிடம் இதே கேள்வியை கேட்பீர்களா? அவர்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் வீராங்கனை யார் என்று கேட்பீர்களா?  என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

மேலும் என்னிடம் எப்போதும் இதுபோன்ற கேள்விகளையே கேட்கிறார்கள், ஆனால் அதற்கு பதிலாக, ஆண் கிரிக்கெட் விரர்களிடம், உங்களுக்க  பிடித்த பெண் கிரிக்கெட் வீராங்கனை யார்? என்று தான் கேட்க வேண்டியதுதானே?  என்று சற்று கோபமாக கூறினார்.

மேலும், ‘ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கும், எங்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பெண்கள் கிரிக்கெட் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்வது இல்லை. கடைசி இரண்டு உள்நாட்டு தொடர்களின்போது மட்டுமே பெண்கள் கிரிக்கெட் போட்டியை  இந்திய கிரிக்கெட் வாரியம் நேரடி ஒளிபரப்பு செய்ய முயற்சித்தது என்றார்.

சமூக வலைதளங்களின் மூலம் பெண்கள் கிரிக்கெட் நிறைய முன்னேற்றம் கண்டு இருக்கிறது. ஆனாலும் இன்னும் அங்கீகாரம் தேவை என்றே கருதுகிறேன். தற்போது  ஆண்களின் கிரிக்கெட் மட்டுமே இலக்கை நிர்ணயிக்கின்றன. நாங்களும் இலக்கை எட்டிப்பிடிக்கவே முயற்சித்து வருகிறோம் என்றார்.

மேலும், நாங்களும்,  ஆண் கிரிக்கெட் வீரர்களிடம் பயிற்சி பெற்றவர்கள் தான்’ என்றார்.

இதற்கிடையில், உலக கோப்பையில் இந்திய பெண்கள் அணி சிறப்பாக செயல்படுவதற்கு வாழ்த்துக்கள் என்று  கேப்டன் விராட் கோலி சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.