சென்னை:

ஸ்டெர்லைட் ஆலை தொடங்க யார் காரணம்? என்பதை சட்டமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலிந் கூறுகையில், ‘‘ஸ்டெர்லைட் ஆலை தொடங்க யார் காரணம்? என்பதை சட்டமன்றத்தில் விவாதிக்க தி.மு.க. தயாராக உள்ளது. முதல்வர் தயாரா என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அரசாணை குறித்தும் விவாதிக்க தயார். ஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டோம் என கூறிவிட்டு தான் திமுக வெளியேறியது’’ என்றார்.