வளர்ப்பு மகளுடன் சாமியார்

சிர்சா, ஹரியானா

ரியானாவைச் சேர்ந்த பிரபல சர்ச்சை சாமியார் குர்மீத் ராம் ரஹீமி,ன் பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது இவரது அமைப்பை நடத்துவதற்கான அடுத்த வாரிசு யார் என்பது குறித்து சர்ச்சை வெடித்துள்ளது.

தேரா சச்சா சவுதா எனும் மிகப்பெரிய அமைப்பை நடத்தி வந்த சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங். அந்த அமைப்பில் லட்சக்கணக்கானவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த அமைப்பு பெரும் தொழில் நிறுவனமாகவும் வளர்ந்துள்ளது. பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், ஷாப்பிங் மால்கள், தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர் மற்றும் ஒரு சில தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறது இந்த தேரா சச்சா சவுதா அமைப்பு.

சுமார் 12 மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் இந்த அமைப்புக்கு சொந்தமாக உள்ளது.

இத்தகைய மிகப்பிரம்மாண்டமான தொழில் சாம்ராஜ்யமாக இருந்த அமைப்பின் தலைவராக இருந்த குர்மீத் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தேரா சச்சா சவுதா அமைப்பின் அடுத்த தலைவர் யார்? அந்த அமைப்பை நிர்வகிப்பவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராம் ரஹீம் குடும்பத்தினர்

குர்மீத்துக்கு சாரன்ப்ரீத், அமன்ப்ரீத் என்று இரண்டு மகள்களும் ஜஸ்மீட் என்ற மகனும் இருக்கிறார்கள். மகள்களுக்கு திருமணம் ஆகவிட்டது. ஆகவே ராம் ரஹீமின் ஆன்மீக வாரிசாக ஜஸ்மீட் அறிவிக்கப்பட்டு, தேரா சச்சா சவுதா அமைப்பை அவர் நிர்வகிப்பார் என்று சொல்லப்படுகிறது.

ராம் ரஹீம் சிறைக்கு போன அன்றே, அவரது தாய் நசீப் கவுர், தனது பேரன் ஜஸ்மீட்தான் தேரா அமைப்பின் அடுத்த தலைவர் என்று தெரிவித்தார்.

ஆனாலும் தேரா அமைப்பின் தலைவர் பதவிக்கு வேறு சிலரும் போட்டி போடுகிறார்கள். குர்மீத் ராமுக்கு ஹனிப்ரீத். என்ற வளர்ப்பு மகள் ஒருவர் இருக்கிறார். இவர் ராம் ரஹீம் நடித்த திரைப்படங்களில் நடித்தவர். 2009 ஆம் ஆண்டு இந்தப் பெண்ணை ராம் ரஹீம் தனது மகளாகத் தத்து எடுத்தார்.

1999 ஆம் ஆண்டு குர்மீத்தின் பக்தரான விஸ்வாஸ் குப்தாவை திருமணம் செய்து கொண்டவர் ஹனிப்ரீத். குப்தா தான் குர்மீத்துக்கு ஹினியை அறிமுகப்படுத்தினார். பிற்பாடு ஹனிக்கும் குர்மீத்துக்கும் முறைகேடான தொடர்பு இருப்பதாக பஞ்சாப் ஹரியானா நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் குப்தா. ராம் ரஹீமின் கட்டுப்பாட்டில் ஹனி இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

அதன்பிறகு ஒரு வழியாக குப்தாவும், குர்மீத்தும் நீதிமன்றத்திற்கு வெளியே சமாதானம் பேசி, பிரிந்துவிட்டனர். அதன்பிறகு தேரா ஆசிரமத்திற்கு சென்று குர்மீத்துடன் வசிக்க ஆரம்பித்தார் ஹனிப்ரீத்.

தேரா சச்சா அமைப்பின் தலைவர் பதவிக்கு இவரும் போட்டி போடுகிறார்.

நடிகை, இயக்குனர் என்று பல முகங்களைக் கொண்ட இவர் தேரா அமைப்பினர் மத்தியில் மிகப்பிரபலம். ட்விட்டரில் இவரை 10 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர் என்றும் 5 லட்சம் பேருக்கு மேல் பேஸ்புக்கில் இவரைப் பின்தொடர்வதாகவும் கூறுகிறார்கள்.

இவர்களைத் தவிர தேரா அமைப்பின் தலைவர் பதவிக்கு விபாசனா எனப்படும் 35 வயது பெண்மணியின் பெயரும் அடிபடுகிறது. விபாசனா தேரா அமைப்பின் சாத்வியாகவும் அந்த அமைப்பில் நிர்வாகப் பொறுப்பிலும் இருக்கிறார். இவரும் தலைவராகும் முயற்சியில் இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆக.. அடுத்த தலைவர் யார் என்பதற்கான போட்டி ஆரம்பித்துவிட்டதாகவே தோன்றுகிறது.