சென்னை

திமுக சுவரொட்டிகள் மற்றும் பேனர்களில் யார் யார் படம் இடம்பெற வேண்டும் என்பது குறித்து அக்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் உத்தரவு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெறுவதையொட்டி பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  குறிப்பாகப் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் பல இடங்களில் பிரசாரங்கள் நடத்தி வருகின்றன.

இந்த பிரசாரம் நடக்கும் இடங்களில் இரு கட்சியினரின் சார்பிலும் ஏராளமான சுவரொட்டிகள், பதாகைகள் எனப் பல வித விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அதில் திமுக பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பெரியார், அண்ணா, கலைஞர், மற்றும் தமது புகைப்படங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.