சென்னை:

ஆர்.கே.நகரில் அதிமுக தோல்விக்கு காரணமான கட்சி நிர்வாகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று முதல்வர் பழனிசாமிக்கு அவைத்தலைவர் மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அவைத்தலைவர் மதுசதனன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் முதலவர் பழனிச்சாமிக்கு மதுசூதனன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘ ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வியடைந்தது.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் இதுவரை ஆலோசிக்காதது ஏன்?. எனது தோல்விக்க யார் காரணம். தோல்விக்கு காரணமான கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?. நான் வெற்றி பெற்றிருந்தால் அது கட்சியின் வெற்றியாக இருக்கும். நான் தோற்றது கட்சியின் தோல்வி தானே?.

திமுக தனது தோல்வி குறித்து ஆராய்ந்து தேர்தல் பொறுப்பாளர்களை கூண்டோடு நீக்கியுள்ளது. ஆனால் இப்போது வரை தோல்வி குறித்து அதிமுக எந்த ஆய்வு கூட்டமும் நடத்தவில்லை. எனது கேள்விகள் குறித்து திருப்திகரமான பதில் தரவில்லை எனில் எனது முடிவு தன்னிச்சையாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கடிதத்தில் மதுசூதனன் 14 கேள்விகள் எழுப்பியுள்ளார். இந்த திடீர் கடிதம் அதிமுக தலைமைக்கு பெரும் நெருக்கடியை ஏற்டுத்தியுள்ளது.