அதிமுகவின் அடிப்படை பொறுப்பிலிருந்து கே.சி பழனிசாமியை நீக்கியதற்கான காரணம்  குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் என்று முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி கூறியிருந்தார். பாஜகவுக்கு எதிராக இப்படி அவர்  பேசியதால், அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், கே.சி பழனிசாமியை நீக்கியது ஏன் என்று அமைச்சர் ஜெயக்குமுார் விளக்கம் அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களை  சந்தித்த  அவர், “கே.சி. பழனிச்சாமி,  கட்சியின் அடிப்படை விதியை மீறி கொள்கை முடிவு குறித்து பேசியதால் நீக்கப்பட்டுள்ளார். அவரது பேச்சில் உள்நோக்கம் இருக்கிறது.  கொள்கை முடிவை தனிநபர் எடுக்க முடியாது” என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.  பத்து நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கி, இதுவரை இல்லாத அளவுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.