மும்பை:

குடியுரிமை சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்? என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பி உள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்த வந்த சிறுபான்மையின  மக்களுக்கு குடியுரிமை வழங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது, அதே வேளை யில் அங்குள்ள பெரும்பான்மையின மக்களான இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு உள்ளது.

இதற்கு காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார், நாட்டில் தற்போது நிலவும் மிக முக்கியப் பிரச்னைகளில் இருந்து மக்களை திசைத் திருப்பவே குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி போன்ற விஷயங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்துவதாக குற்றம்சாட்டியவர், இந்த சட்டத்தில், இலங்கையில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.