துரை

மிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணையை ஏன் தொடரக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழக பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி மீது மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் வழக்கு மனு பதிவு செய்தார்.  அந்த மனுவில் கடந்த 2011 முதல் 2013 வரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகவும் அவர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை செய்ய வேண்டும்” எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகளான சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோரின் அமர்வு விசாரித்து வந்தது. இந்த அமர்வுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை இந்த  புகாரில் முகாந்திரம் இல்லாததால் விசாரணை கைவிடப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்  ஆனால் நீதிபதிகள் அமைச்சர் திருத்தங்கல் பேரூராட்சி துணைத்தலைவராக இருந்த காலம் முதல் அவர் வருமானம் மற்றும் சொத்துக்கள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த  போது லஞ்ச ஒழிப்புத் துறை  குறிப்பிட்ட காலத்தில் அவருடைய சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தது.  அதையொட்டி நீதிபதிகள் அமர்வு, “வழக்கை முதல் கட்ட விசாரணையுடன் எப்படி முடித்து வைக்க முடியும்?  ஏன் விசாரணையைத் தொடரக் கூடாது?” எனக் கேள்விகள் எழுப்பியது.   அத்துடன் 750 கொண்ட முதல் கட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட அமர்வு வழக்கு விசாரணையை ஜனவரி 23 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தது.